பூரணம் பதிப்பகம், வடக்கு ரத வீதி கூமாப்பட்டி, விருதுநகர், (பக்கம்:148)
நூலாசிரியர் முத்துராமலிங்கம், அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயில் விழாக் கள் என்ற தலைப்பில் உருவாக்கிய எம்.பில்., ஆய் வேட்டை நூல் வடிவில் கொணர்ந்துள்ளார். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறப்புற்று விளங் கும் கடற்கரைக் கோயிலான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலின் தல வரலாறு, கோயில் அமைப்பு முறை மற்றும் கோயிலில் நடக்கும் விழாக்கள் ஆகியவை விளக்கமாக இந்த நூலில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. இந்தக் கோயிலைப் பற்றி பல்வேறு இலக்கியங்களில் இடம்
பெற்றுள்ள குறிப்புகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இந்தக் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள பிற கோயில்களைப் பற்றிய விவரங்களும் தொகுப்பட்டுள்ளன. ராமநாத சுவாமி கோயிலைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதம்.