முகப்பு » கதைகள் » சமூகக் கதைகள் - முதற் பகுதி

சமூகக் கதைகள் - முதற் பகுதி

விலைரூ.90

ஆசிரியர் : கோவி.மணிசேகரன்

வெளியீடு: கோவி பிரசுரம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
கோவி பிரசுரம், 18/104, இரண்டாவது தெரு, வெங்கடேசா நகர், விருகம்பாக்கம், சென்னை-600 092. (பக்கம்: 400.)

சரித்திரக் கதைகளைத் தந்து தமிழ் எழுத்துலகில் புதிய சரித்திரம் படைத்த இலக்கிய சாம்ராட் கோவி.மணிசேகரன் கடந்த அறுபது ஆண்டுகளில் பல்வேறு இதழ்களில் எழுதிய சுமார் 41 சமூகச் சிறுகதைகள் இதில் தொகுக்கப் பட்டுள்ளன.

கடந்த 1969ல் வெளியான `அசடு.' 1971ல் வெளியான `ஈவது இகழ்ச்சி' போன்ற கதைகள் நாடகக் கலைஞர்களின் அவலத்தைச் சுட்டுவதாய் உள்ளன. வெவ்வேறு காலக் கட்டங்களில் எழுதப்பட்டுள்ள இச்சிறுகதைகள், இலக்கிய வரலாற்றையும், சமூக நிகழ்வுகளையும் படம் பிடித்துக் காட்டுவதாய் அமைந்துள்ளன.

`ரசமாகக் கதையை நடத்திச் செல்லும் தந்திரங்களை கோவி.மணிசேகரன் நன்றாகத் தெரிந்தவர், பயன்படுத்தி வெற்றியும் கண்டவர். ஆகவே, அவரது, கதைகளை அலுப்பில்லாமலேயே படித்து முடிக்கலாம்,' என்று பிரபல எழுத்தாளர் சாண்டில்யன் கூறியுள்ளது இந்நூலுக்கும் பொருந்தும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us