'அம்மா' என்று அழைக்கும்போதே அழகாக இனிக்கிறதே! நாம் வாழ்ந்துவிட்டுப் போய்விடும் இந்தப் பேரிருப்பைப் படைத்த ஜகன்மாதா எப்படி இருப்பாள்? வார்த்தை தேடி அலைந்திருக்கிறார் ஆதிசங்கரர். 'சௌந்தர்ய லஹரி'யில் அவளது யௌவனம் பிடிபட்டுவிட்டது. ஒரு கவிஞனாக ரசிக்கிறார், பக்தனாக நெகிழ்கிறார். அவளைத் தேடி அலையாமல், அடைய நமக்கெல்லாம் ராஜபாட்டை அமைத்திருக்கிறார். 'திருவரங்கன் உலா' எழுதிய ஸ்ரீவேணுகோபாலன் எல்லோருக்கும் புரியும்வண்ணம் எளிய உரையில் 'அழகே அமுதே!' என்று இந்நூலைப் படைத்து 'தமிழே' என்று நமக்குத் தந்துவிட்டார்.