கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
சுயமுன்னேற்றத்திற்குக் கதைகள் உதவுமா? கதைகளில் ஒரு படிப்பினை இருக்கிறது என்பது இந்தியாவிலுள்ள ஆயிரக்கணக்கான பழங்கதைகளிலிருந்து தெரிய வருகிறது. கதையில் என்ன சொல்லியிருக்கிறது என்பதும் அது உங்கள் சிந்தனையை எப்படித் தூண்டுகிறது என்பதும் படிக்கிறவர்களின் மனநிலையைப் பொறுத்தது. கதையிலிருந்து உங்களுக்கு வேண்டிய பாடங்களை எடுத்துக் கொண்டு,வாழ்க்கையில் முன்னேறுவது உங்களைப் பொறுத்தது. இந்தக் கதைகளை ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பியுங்கள். இந்தக் கதையிலுள்ள கருத்துக்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படிப் பொருந்துகிறது என்று சிந்தியங்கள். அதை நடைமுறைப்படுத்தி, உங்கள் வெற்றிகரமான வாழ்க்கையை முதற்படியிலிருந்து இந்தப் புத்தகத்துடன் தொடங்குங்கள்.