கவியரசன் பதிப்பகம், சென்னை-92. (பக்கம்: 304)
எல்லா குறள்களுக்கும் இனிய தமிழில், செம்மொழியில் எளிய நடையில் இந்நூலில், முயற்சி மேற்கொண்டுள்ளார். காக்க வேண்டியவர்களால் கைவிடப்பட்டவர் என்ற (பக்.26 - குறள் 42) இடத்தில் பற்றில்லாத துறவியர் என்பது ஏற்புடையதா? தீக்குறளைச் சென்றோதோம் என்ற ஆண்டாளின் திருவாக்கில் "கோள் சொல்ல மாட்டோம் என்ற பொருளை, கோதை நாச்சியார் "தீய குறள் எனக் கூறிப் போந்தார் என எழுதி உள்ளது உண்மைக்குப் புறம்பானது.(பக்.5) இந்நூலை, திருக்குறளில் தெளிவு பெற முனைபவர் வாசிக்கலாம்.