விலைரூ.120
புத்தகங்கள்
"கோபுர தரிசனம் தீபாவளி மலர், பக்திமணம் பரப்பும் வகையில் அமைந்துள்ளது. மிகச் சிறந்த ஓவியர்களான வேதா, மாருதி, பத்மவாஸன், ம.செ.துர்கா ஆகியோரின் பங்களிப்பு, மலரின் தயாரிப்புத் தரத்திற்குக் கட்டியம் கூறுகிறது. திருப்பூர் கிருஷ்ணன், டாக்டர் இரா.நடராஜன், வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமி, சாருகேசி ஆகிய பிரபல எழுத்தாளர்களின் அற்புதமான படைப்புகள் மலரை அலங்கரித்துள்ளன. பாபநாசம் சிவனை தமிழ்த் தியாகையா எனப்போற்றி எழுதியுள்ள, "ரண்டார்கையின் கட்டுரையில், விஷயங்கள் நிறைந்துள்ளன. கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், கோல்கட்டா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் படைப்புகளில், விசாலமான பார்வையைக் காண முடிகிறது. அருட்செல்வர், கோவில் வாகனங்கள் பற்றி எழுதியிருக்கிறார். புதுமையான தகவல்கள், "நடையில் நின்ற நாயகன் என்ற தலைப்பில், சுதா சேஷய்யனின் கட்டுரையில், இதிகாசத்தை அற்புதமாகத் திறனாய்வு நோக்கில் நமக்கு அறிமுகம் செய்திருக்கிறார். படிப்பதற்கும், பார்த்து ரசிப்பதற்குமாக, பல ஆன்மிக விஷயங்கள், அற்புதமான ஓவியங்கள் என, இந்த ஆண்டு தீபாவளி மலர் மிகச் சிறப்பாக உள்ளது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய