முகப்பு » இலக்கியம் » முஸ்லிம் தமிழ் வீரக் கவிதை - ஆய்வு

முஸ்லிம் தமிழ் வீரக் கவிதை - ஆய்வு

விலைரூ.150

ஆசிரியர் : திருமலர் எம்.எம்.மீரான் பிள்ளை

வெளியீடு: சாதனை வெளியீடு

பகுதி: இலக்கியம்

ISBN எண்:

Rating

பிடித்தவை

 39/13, ஷேயகதாவுத் தெரு, ராயப்பேட்டை, சென்னை -14

 (பக்கம் : 344)

முஸ்லிம் தமிழ் புலவர்கள் தமிழுக்குப் புதிதாக அறிமுகப்படுத்திய படைப்போர் வகையிலமைந்த காப்பியங்களையும், கதைப்பாடல்களையும் பன்முக நோக்கில், ஆழமான நடையில் ஆராய்ந்து பல உண்மைகளையும் வெளிக் கொணரும் முதன்மையான நூல், இந்த முஸ்லிம் தமிழ் வீரக் கவிதை ஆய்வு.
 தமிழில் படைப்போர் இலக்கியம் எழுதப்பட்டது, 16ம் நூற்றாண்டிற்கு பின்னர் தான் போர்த்துகீசியர் போன்ற வெளி ஆதிக்கச் சக்திகள், கிழக்கு மேற்குக் கடற்கரைப் பகுதிகளில், வணிகச் செல்வாக்கு பெற்றிருந்த முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ந்த போரைக் கண்டு, மனம் பொறுக்காமல் அந்நிய சக்திகளை துரத்துவதற்கு, முஸ்லிம்களுக்கு தைரியம் ஊட்டும் நோக்கத்தோடு, இயற்றப்பட்ட வகைதான் படைப்போர் போன்ற போர் இலக்கியங்கள்படைப்போர் சித்தரிக்கும் போர்களில் எல்லாம், வலிந்து தாக்க வருபவர்களை தடுக்கும் நோக்கில் அமைந்த, தற்காப்பு போர்களாக  அமைவதும் கொடுங்கோலர்களை, தூது அறிவுரைகளால் திருத்த முயல்வதும், போரில் ஆயுதம் இழப்பவர்களை கொல்ல வாய்ப்பிருந்தும் கொல்லாமல், சிறைபிடிப்பதும் கவனிக்க வேண்டியதாகும்.முஸ்லிம் தமிழ் வீரக் கவிதை - ஆய்வு மேலும் பல புதிய வாசல்களைத் திறந்து விட உந்துதலாக இருந்து, சமுதாய விழிப்புணர்வை ஊட்டும் என நம்பலாம்.

 

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

OR

Login with

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website. All rights reserved.  | Contact us