விலைரூ.150
புத்தகங்கள்
பக்கம்: 240
வள்ளலார், திருமூலர், திருவள்ளுவர் நூல்கள் வழங்கும் இறை நெறியினை 30 தலைப்புகளில் வழங்குகிறது இந்நூல். பல இடங்களில், இராமலிங்க வள்ளலாரின் உரைநடையினை அப்படியே மேற்கோளாகத் தந்துள்ளார் நூலாசிரியர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் உள்ள தமிழ் உரைநடைத் தன்மையினைப் புரிந்து கொள்வதற்கும், இந்த நூல் பெரிதும் உதவும். மோட்சத்தை அடையும் பாதை என்று தனியாக எதுவும் இல்லை. மனித உயிர்கள் இறந்த பிறகு, அவை மோட்சம் செல்வதற்கு யாரும் நெய்ப்பந்தம் பிடித்து வழிகாட்ட வேண்டிய தேவை இல்லை. ஒருவன் பொய், களவு, கொலை முதலான பாவச் செயல்களைச் செய்யாமல் இருந்தாலே மோட்சத்தை
அடைந்து விடலாம் என்று வள்ளலார் தெரிவித்த கருத்து எளிய நடையில் தரப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய