விலைரூ.36
புத்தகங்கள்
தெய்வத் திருமணங்கள்
விலைரூ.36
ஆசிரியர் : திருமுருககிருபானந்தவாரியார்
வெளியீடு: குகஸ்ரீ வாரியார்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை. பக்கம்: 152,
முருகன் புகழ்பாடும் திருப்புகழை எங்கும் பரப்பி, ஆலயங்களில் திருப்பணி நடத்தி, பாமரர் மனதிலும் பக்தியோடு கலந்த தமிழை விதைத்தவர், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். இவர் பாட்டாளிக்கும், பக்தியைக் கூட்டாளி ஆக்கியவர். தாட்சாயணி திருமணம், பார்வதி திருமணம், மீனாட்சி திருமணம், வள்ளி, தெய்வானை திருமணங்கள், சீதா திருமணம் போன்ற ஆறு தெய்வத் திருமணங்களை மேடையில் வாரியார் பேசியதை, அப்படியே வரிகளில் பதித்து, நூலாக வெளியிட்டுள்ளனர். குறுந்தகட்டில் வாரியார் பேசுவது போல், இந்த நூலைப் படித்தவர் செவிகளில், அவரது கணீர் குரல் ஒலிப்பதைக் கேட்கலாம். படிப்பவர்கள், பேச்சு நடையில் நூல் நடந்து வருவதால், படிக்கும் போதே கேட்கவும் முடிகிறது. கேட்பதை மனக் கண்ணால் காணவும் முடிகிறது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login with