முகப்பு » தமிழ்மொழி » தொல்காப்பியர் வழியில் நாட்டுப்புலவியல்

தொல்காப்பியர் வழியில் நாட்டுப்புலவியல்

விலைரூ.120

ஆசிரியர் : குரு சண்முகநாதன்

வெளியீடு: சங்கீதா பதிப்பகம்

பகுதி: தமிழ்மொழி

Rating

பிடித்தவை

பக்கம்: 202    

தொல்காப்பியம் பற்றிப் பலரும் அறிவர். தமிழின் தொன்மையான இலக்கண நூல் அது. நாட்டுப்புறவியல் என்பதும் பலரும் அறிந்ததே. ஆனால், இது, நாட்டுப்புலவியல், புதுமையான சொல்லாக்கம். நாட்டுப்புறவியல் என்பது குறையுடைய சொல்லாட்சி என்றும், தொல்காப்பிய வழியில் ஆராய்ந்து புதிதாக இந்தப் புலவியல் ஆக்கப்பட்டது என்றும் ஆசிரியர் எழுதியுள்ளார்.
புலம் என்னும் சொல், இடத்தை  நிலத்தை, ஊரைக் குறிக்கும் சொல். ஆதலின் புறம் என்பதனிலும் புலம் என்பது சரியாகப்படுகிறது. "நாட்டார் பாடல் என்னும் சொல்லும் வழக்கத்தில் உள்ளது. இது ஒரு சாதியினரைக் குறிக்கும் சொல்லாதலும் உண்டு. நாடு என்பது தேசத்தைக் குறிப்பதாயின், பல காலமாகச் சிற்றூர் (கிராமம்) என்பதைக்
குறிக்குமாறு நாட்டுப்புறம் என்ற சொல்லாக்கம் பயன்பாட்டில் உள்ளது.
இந்நூலின்கண்,  தாலாட்டுப் பாடல்கள், காதல் பாடல்கள், தொழில் பாடல்கள், விழாப் பாடல்கள், சமுதாயப் பாடல்கள், கோமாளிப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் என்ற பல்வேறு கிராமியப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அப்பாடல்கள் பற்றி நீண்ட ஆய்வும் செய்யப்பட்டுள்ளது. இந்தத் துறையில் முன்னரே பல நூல்கள் வந்துள்ளன
என்பது பற்றியும், அவற்றைத் தொகுத்தவர்கள் பற்றியும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.தொல்காப்பியத்தில் புலப்பாடல் குறிக்கப்படுகிறது.  ஆதலில் நாட்டுப்புலப்பாடல் என்பதே சரி என, ஆசிரியர் நிறுவுகிறார். படித்துப் பயனடைய வேண்டிய நூல்.


 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us