முகப்பு » சமயம் » மகான் இரா­மா­னுஜர் அரு­ளிய ஸ்ரீபாஷ்யம் (பிரம்ம சூத்­திர

மகான் இரா­மா­னுஜர் அரு­ளிய ஸ்ரீபாஷ்யம் (பிரம்ம சூத்­திர விளக்கம்)

விலைரூ.275

ஆசிரியர் : ஸ்ரீரங்கம் சடகோப சித்து ஸ்ரீநிவாசன்

வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

பகுதி: சமயம்

Rating

பிடித்தவை

பக்கம்: 448  

     திரு­நா­ரா­ய­ண­புரம் திருக்­கோவில், தாழ்த்­தப்­பட்ட சாதி மக்­களை, திருக்­கு­லத்தார் என்று திரு­நா­ம­மிட்டு வாழ்த்தி, அவர்­க­ளுக்கு எட்­டாக்­க­னி­யாக இருந்த ஆலய வழி­பாட்­டிற்கு திருக்­கோவில் கத­வு­களைத் திறக்கச் செய்த வித்­தகர் இரா­மா­னுஜர். வைண­வத்தில் புத்­து­லகச் சிந்­த­னை­களை பதிவு செய்த புரட்சித் துறவி.
அப்­பெ­ருமான் இம்மண்ணுலகில் ஏறத்­தாழ 120 ஆண்­டுகள் கி.பி.1018 - 1137 வாழ்ந்து சமய மறு­ம­லர்ச்­சிக்கு வித்­திட்ட ஞான­கா­ரகர். பல நூல்­களைத் தந்­துள்ளார்.
ஸ்ரீபாஷ்யம் ஒரு வட­மொழி நூல். தர்க்­க­வா­தங்­களும், மறுப்­பு­களும் நிறைந்த சாஸ்­திரம். அதை முழு­மை­யாக கற்­று­பு­ரிந்து  கொள்ள வட­மொழிப் பயிற்சி தேவை.நான்கு அத்­தி­யா­யங்கள், பதி­னாறு பாதங்கள், களங்கள் 156, பிரம்ம சூத்­தி­ரங்கள் 545, இத்­த­கைய சிறப்பு வாய்ந்த வட­மொழி உரை நூலை தமிழில் ஸ்ரீரங்கம் சட­கோப முத்து ஸ்ரீநி­வாசன்                        தந்­துள்ளார்.
     இரா­மா­னு­சரே முதல் கட்­ட­ளை­யாக  ஸ்ரீபாஷ்­யத்தைக் கற்றும், கற்­பித்தும், வாழ்­நாளை புண்­ணி­யமாய்   கழித்­திட வேண்டும்"  என திருவாய் மலர்ந்­துள்ளார். நல்ல மொழி நடை, எளிய தமிழில் மூல நூலின் கருத்தும் ஆக்­கமும் சிந்­தாமல் சித­றாமல் உள்­ளது உள்­ள­படி தந்­துள்ளார் நூலா­சி­ரியர்.  வைணவப் பெரு­மக்­களின் இல்­லந்­தோறும் இருக்க    வேண்டிய ஞானப்பேழை.


 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us