முகப்பு » இலக்கியம் » செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்

விலைரூ.150

ஆசிரியர் : முனைவர் மு.இளங்கோவன்

வெளியீடு: வயல்வெளிப் பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இந்த நூல் தமிழர் வரலாறு. பண்பாட்டு செய்திகளைப் பற்றியது. இதில் அமைந்துள்ள இருபது கட்டுரைகளும், இனியவை இருபது என்று சொல்லத்தக்க அளவில் சிந்தனையைத் தூண்டுவனவாக உள்ளன.

சங்க கால மன்னர்களான கரிகாலன், நன்னன், மலையமான் பற்றிய தகவல்களும், நவிர மலை, கபிலர் குன்று, பெருமுக்கல் மலை அரிக்கமேடு ஆகிய வரலாற்றுத் தலங்களைப் பற்றிய அரிய செய்திகளும், குறுந்தொகை மலைபடுகடாம், பட்டினப்பாலை, சிலம்பு, திருக்குறள், சங்கப் பாடல்களில் வாய்மொழி இலக்கியத்தின் தாக்கம் ஆகியவை பற்றியுமான நுண்ணிய பார்வைகளும், சிந்தனைக்கு விருந்தாக அமைவன.சங்கப் பாக்களைப் பின்னாளில் பாடுவாரின்மையால், அவை வாய்மொழியாகப் பாடப்பட்டன என்ற ஆசிரியர்களின் கருத்து, சிந்திக்கத்தக்கது. சிலம்பில் இசை தொடர்பான தகவல்களை, இரு கட்டுரைகள் உணர்த்துகின்றன. திருக்குறளுக்கு உரை எழுதியோர் அதை எவ்வெவ்வகையில் எதிர்கொண்டனர் என்பதைச் சில கட்டுரைகளில் தெரிவிக்கிறார் ஆசிரியர்.
 
பரிமேலழகரின் நிறை குறைகளைப் பாவாணர் எவ்வாறு உணர்த்துகிறார் என்பதனையும், திராவிட இயக்க உணர்வினர் குறளைத் தங்களது கருத்தியலுக்கான கருவூலமாகக் கொண்டு உரை எழுதியிருப்பதையும் விரிவுபட விளக்குகிறார். குறுந்தொகை பற்றிய கட்டுரையில், அந்நூலில் இடம்பெறும் குளகு, குறியிறை போன்ற சொற்களுக்குப் பொருள் முடிபு காண்பது பாராட்டுக்குரியதாய் உள்ளது.
ராம.குருநாதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us