நாற்கவிப்பெருமாள் என்ற சிறப்புப் பெற்றவர், திருமங்கையாழ்வார் ஆவார். அவரின் பெரிய திருமொழியில், 1,084 பாசுரங்கள் உள்ளன. அப்பாசுரங்களில் கூறப்படும், திவ்விய தேசங்கள், சிலவற்றின் பெருமைகளை இந்நூல் விவரிக்கிறது. ஆசிரியரின் இனிய எளிய நடை நூல் படிக்கத் தூண்டுகிறது. 51 திருத்தலங்களின் பெருமைகளை, திருமங்கையாழ்வார் பாசுரங்களுடன் விவரித்துச் சொல்வது, மிக அருமையாக உள்ளது. வைணவ அடியார்களுக்கு மிகவும் பயனுள்ள நூல். டாக்டர் கலியன்சம்பத்து