முகப்பு » இலக்கியம் » கண்ணா வருவாயா! (வாழ்வியல் விளக்கங்கள்)

கண்ணா வருவாயா! (வாழ்வியல் விளக்கங்கள்)

ஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி

வெளியீடு: தனலட்சுமி பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வாசகர் உலகம் நன்கறிந்த சிறுகதை எழுத்தாளரான, வரலொட்டி ரெங்கசாமி, பகவத்கீதையைக் கையில் எடுத்திருக்கிறார். அத்துடன் கூட, மிகச் சிறந்த சிந்தனையாளர்களின் ஆன்மிக நூல்களையும், கருத்தூன்றிப் படித்திருக்கிறார். நிதானமாக உட்கார்ந்து சிந்தித்து விட்டு, பகவத் கீதையின், 702 சுலோகங்களுக்கு எளிய தமிழ் நடையில் விளக்கம் (விரிவுரை? பாஷ்யம்?) எழுதியிருக்கிறார்.
ஏராளமான மேற்கோள்களைப் பொருத்தமான இடங்களில் சரியான விகிதத்தில் கோர்த்திருக்கிறார். மறக்காமல், அவர்களின் பெயர்களைப் பதிவு செய்திருக்கிறார். பகவன் ஸ்ரீராமகிருஷ்ணர், மகாகவி பாரதியார், திருவள்ளுவர், கண்ணதாசன், சாமர்சாட் மாம்... நக்கீரன்... இப்படிப் பலரைக் கையைப் பிடித்து அழைத்து வந்து, பகவத் கீதையின் ஆன்மிகப் பூந்தோட்டத்தில் உட்கார வைத்து, நமக்கு ஒரு ஆன்மிகப் பிரசாதம் வழங்கியிருக்கிறார், வரலொட்டி ரெங்கசாமி.
பகவத் கீதையை எளிதாக்கி, அனைவருக்கும் சென்றடையச் செய்ய முடியும் என்பதில், மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார், நூலாசிரியர்.
ஜனகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us