கவியரசு கண்ணதாசனின் திரைப்படப் பாடல்கள் கவிதை இலக்கணத்துடன் அமைந்தவை. ஆழ்ந்த கருத்துகளுடன் கூடியவை. ஆயிரக்கணக்கான பாடல்களில் இருந்து, பக்தி, காதல், சோகம், தத்துவம், பல்சுவை என, ஐந்து வகைப்பட்ட தலைப்பின் கீழ் வரும் பாடல்களைத் தேர்வு செய்து விளக்கி எழுதியிருக்கிறார், காவிரி மைந்தன். காலத்தை வென்று தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் கவியரசரின் பாடல்கள் பற்றி, விரிவான ஒரு பகுப்பாய்வை சுவைபட செய்திருக்கிறார், நூலாசிரியர். ஜனகன்