முகப்பு » தத்துவம் » நம்பிக்கை நாட்காட்டி

நம்பிக்கை நாட்காட்டி

விலைரூ.40

ஆசிரியர் : முனைவர் நா.சங்கரராமன்

வெளியீடு: விஜயா பதிப்பகம்

பகுதி: தத்துவம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘‘நீங்கள் பின்பற்றாத எதையும் அறிவுரைகளாக கூற வேண்டாம்’’என்பதை எப்போதும் நான் கடைப்பிடித்து வருபவன், என்கிறார் முனைவர் நா.சங்கரமாமன். இது போன்ற பல தத்துவ கருத்துக்களை உள்ளடக்கி இவர் எழுதியுள்ள சிறு கையடக்க புத்தகம் ‘நம்பிக்கை நாட்காட்டி’.
இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பல கருத்துக்கள் தினமும், அலைபேசியில் அனுப்பும் குறுஞ்செய்திகளும், முகநூலில் இடும் பதிவுகள் தான். அவற்றை தொகுத்து அளித்துள்ளார் ஆசிரியர். பன்னிரு மாதங்களுக்கும் ஒவ்வொரு நாளுக்கு ஒரு கருத்தாக இவற்றை சுவைபட சிந்திக்கும் படி, பயனுள்ளதாக எழுதியுள்ளார்.
மனதிற்கு பிடித்தவர்களோடு பேசுங்கள் மரண வலிகூட, மரணித்து விடும் தேனீரின் சுவை கோப்பைகளால் தீர்மானிக்கப்படுவது இல்லை
தற்பெருமை பேசுவது தற்கொலைக்கு சமம் என்பது போன்ற கருத்துக்களின் பெட்டகமாய் வெளிவந்துள்ள இப்புத்தகம், வாழ்க்கை நெறிகளையும் கற்றுத்தருகிறது.
சுவின்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us