முகப்பு » தமிழ்மொழி » முதல் தலைமுறை

முதல் தலைமுறை

விலைரூ.110

ஆசிரியர் : வெ.இறையன்பு

வெளியீடு: விஜயா பதிப்பகம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
நூலாசிரியர் வெ.இறையன்பு, டில்லியில் தன் பயிற்சிக் காலத்தில் இந்தி மொழியின் எதேச்சதிகாரத்தையும், பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டதையும் எதிர்த்து குரல் கொடுத்ததற்காக, குறைந்த எல்லையில் தேர்ச்சி பெற்றதை இந்திக்காரர்களின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என, சாடுகிறார்.
‘உச்சத்தில் இருந்த சோழ சாம்ராஜ்யம் பின்னடைவு கண்ட காலத்தில், கம்பன் வாழ்ந்ததால், சோழநாட்டு இளைஞர்களின் இதயத்தில் மறுபடியும் போர்க்குணத்தைப் பாய்ச்ச, யுத்த காண்டத்தில் மட்டும் 4,000த்திற்கும் மேற்பட்ட பாடல்களை படைத்துள்ளார்’ என்பதும்,
‘முதலில் ஒருவன் எதைக் கேட்கிறானோ அதுவே அவன் மனதில் ஆழமாகப் பதியும்’ எனும் மனவியல் கூற்றுப்படி, ‘ராமனால் சாபவிமோசனம் பெற்ற, கவந்தன் எனும் அரக்கன், சுக்ரீவனின் நட்பை பெற்று சீதையை தேடுமாறு கூறியதாலேயே, சுக்ரீவனுக்கு உதவ, வாலியை கொல்ல நேர்ந்தது என, வாலி வதை படலத்தைப் பற்றிக் கூறுவதும் புதிய சிந்தனை.
உலகளாவிய போர்முறைகளையும், போர் உத்திகளையும், கம்பனின் யுத்த காண்டத்தோடு ஒப்புமைப்படுத்திக் கூறுகிறார்.
புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us