முகப்பு » கதைகள் » குருவிக் கூடு

குருவிக் கூடு

விலைரூ.120

ஆசிரியர் : முகிலை இராசபாண்டியன்

வெளியீடு: கோவன் பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், கதை வாசிப்பிலும் பயன்படுத்தப்பட்ட கதைகள் இவை. மனதில் சிந்தனை அலைகளை வெகுவாகத் தூண்டிவிடும் ஆற்றல் பெற்றவை. மனிதநேயம் பாதுகாக்கப்பட வேண்டும், மதங்கள் பாலங்களாக  இருக்க வேண்டுமே தவிர, வேலிகளாக இருக்கக்கூடாது என, வலியுறுத்தும் கதைகள், ‘மதங்களைக் கடந்து’ மற்றும் ‘சப்பரம் எடுப்பு’.
 ஒரு சிறிய குழந்தையின் பெரிய  மனதைச் சொல்வது, ‘பொய்’ என்ற கதை. ‘பாத்திரம் பார்த்து’ என்ற கதையும்  மனிதம் பெரிதா, மதநேசம் பெரிதா என்ற கேள்வியையே எழுப்புகிறது.
‘மருத்துவம்’ என்ற கதை அந்தக் காலப் பச்சிலை வைத்தியத்தின் பெருமையைப் பேசுகிறது. பச்சிலை வைத்தியருக்குப் பணம் கொடுக்க வந்தால், ‘ரூவா வாங்கினா  பலிக்காதுன்னு எங்க மாமா சொல்லி இருக்குது. அதனால ரூவா ஒண்ணும் வேண்டாம். இது ஒரு சேவை அவ்வளவு தான்’ என்று மறுக்கிறார். அன்பின் உச்சத்தை இந்தக் கதை கோடிட்டுக் காட்டுகிறது. மனம் விரிந்தால், பணம் பிரதானமல்ல என்று பேசுகிறது. ஆர்ப்பாட்டம் இல்லாமல், ஆனால் சொல்ல வந்ததை அழுத்தமாகச் சொல்லிவிடும் பாணி, முகிலை ராசபாண்டியன் பாணி. சிறந்த  தொகுப்பு.
எஸ்.குரு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us