முகப்பு » அரசியல் » வோட் பார் கன்சயின்ஸ் (ஆங்கிலம்)

வோட் பார் கன்சயின்ஸ் (ஆங்கிலம்)

விலைரூ.200

ஆசிரியர் : இ.தாமோதர்சுவாமி

வெளியீடு: ஸ்ரீநிதி பப்ளிஷர்ஸ்

பகுதி: அரசியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கடந்த, 1969 ஜனாதிபதி தேர்தலில், ‘மனசாட்சிப்படி’ வாக்களியுங்கள் என்று கூறி கட்சியை பிளந்தது, ‘ஊழல் உலகளாவியது’ என்று கூறி, ஊழலை நியாயப்படுத்தியது என, இந்திய அரசியல் மற்றும் சமுதாய சூழலை நாசம் செய்தது காங்கிரஸ். ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கியவர் இந்திரா காந்தி. அவர், அவரது மகன், அவரது குடும்பத்தினரின் பினாமி ஆட்சி என, காங்கிரஸ் ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடியதை விலாவாரியாக விளக்கியுள்ளார் நூலாசிரியர். ‘முடவன் கூட, கனரக வாகன ஓட்டி உரிமை பெற்றுவிட முடியும்’ (பக். 126) என்பதன் மூலம், ஊழல் வேரோடிப் போனதை மட்டுமன்றி, சமுதாயத்தை சீரழித்துள்ளதையும் எடுத்துக்காட்டியுள்ளார். தமிழகத்தில் திராவிட கட்சிகள், மாறி மாறி ஆட்சி செய்து, தொட்டில் முதல் சுடுகாடு வரை ஊழல், நிரம்பி வழிவதையும் வாரிசு அரசியலின் அவலத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குடும்ப அரசியல், நேரு துவங்கி எல்லா அரசியல் கட்சிகளிலும் இன்று வரை தகுதியற்ற முறையில் வளர்த்தெடுக்கப்படுகிறது. இதனால், காஷ்மீர் பிரச்னை முதல், இலங்கை பிரச்னை வரை எப்படி ஆணவத்தின் அடிப்படையில் தவறான முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.
திருநின்றவூர் ரவிகுமார்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us