முகப்பு » கட்டுரைகள் » பாரதத்தின் பக்த கவிகள்

பாரதத்தின் பக்த கவிகள்

விலைரூ.175

ஆசிரியர் : மு. ஸ்ரீனிவாசன்

வெளியீடு: அருள் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஒரு காலத்தில், கன்னட அரசால் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு, இரண்டு ரூபாய் விலையில் மக்களுக்கு வழங்கப்பட்ட குமார வியாசனின், கன்னட பாரதம்; தெலுங்கில், ‘கவித்ரயம்’ என்று போற்றப்படும் நன்னயர், திக்கணர், எர்ரப்ரகடா  என்ற இலக்கிய மும்மூர்த்திகளால் உருவான, தெலுங்கு மகாபாரதம்;  இதிகாசங்களின் மொழிபெயர்ப்புகளாய் மாதவ கண்டாவி இயற்றிய, காலத்தால்  முற்பட்ட, அசாமிய ராமாயணம்; தெலுங்கில், ‘பதகவிதா பிதாமகர்’ எனும் உயர்பட்டம் பெற்ற, அன்னமாச்சார்யா; பண்டரிநாதரை மீட்ட பானுதாசர், ‘ஒரிய மகாபாரதம்’ இயற்றிய சரளாதாசர், தமிழகத்தில் அருணகிரிநாதர் முதல் கவியோகி சுத்தானந்த பாரதி வரை, 34 பக்த கவிகளை பற்றிய கட்டுரைகள் இதில் அடக்கம்.
‘யாழ்ப்பாணம் சைவ தலைவர் ஆறுமுக நாவலர், வள்ளலாரது பாக்கள் அருட்பா அல்ல, மருட்பாவே என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்’ (பக்.227) என்பது, தவறான தகவல். வள்ளலார் மற்றும் சில தீட்சிதர்கள் மீது, ஆறுமுக நாவலர், மஞ்சக்குப்பம் (கடலூர்) நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடுத்தார்.
பின்னலூரான்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us