சுதந்திர இந்தியாவின் முதல் கால் நூற்றாண்டு காலத் தென்னிந்திய சினிமா உலகில், கொடி கட்டிப் பறந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் மூன்று. அவை, ஜெமினி, ஏ.வி.எம்., மற்றும் வாஹினி. வாஹினி ஸ்டூடியோ நிறுவனரான பி.நாகிரெட்டியை, ‘முதலாளி’ என்று தான் அழைப்பார் எம்.ஜி.ஆர்., அந்த அளவுக்கு நாகிரெட்டியை அவர் மதித்தார்.
வாஹினி ஸ்டூடியோ துவங்கிய காலகட்டம் முதல் அது தயாரித்து அளித்த திரைப்படங்கள், உருவாக்கிய கலைஞர்கள் மற்றும் சென்னையில் ஒரு அடையாளமாக மாறிய வரலாறு ஆகியவற்றை விரிவாக பதிவு செய்துள்ளது இந்த நூல்.
நாகிரெட்டி தயாரித்து, எம்.ஜி.ஆர்., நடித்த, ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தை, தியேட்டரில் பார்க்க இருவரும் சென்ற போது, கூட்டத்தில் சிக்கிக் கொண்ட நாகிரெட்டியை அலேக்காக தூக்கி வந்து காரில் ஏற்றிய எம்.ஜி.ஆரின் செயலைக் கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். என்பது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.