முகப்பு » ஆன்மிகம் » ஆழ்வார்கள் நோக்கில் அரங்கன்

ஆழ்வார்கள் நோக்கில் அரங்கன்

விலைரூ.300

ஆசிரியர் : கல்யாணி ஸ்ரீதரன்

வெளியீடு: கீதாசார்யன்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
திருவரங்கம் பெரிய கோவிலின் சிறப்புகளையும், அக்கோவில் குறித்த அனைத்துச் செய்திகளையும் இந்த நூல் தொகுத்துக் கூறுகிறது. திருவரங்கம் செல்வோர், இந்த நூலைப் படித்து விட்டுச் சென்றால், மிகவும் பயனடைவர்.  நூலில், திருவரங்கம் கோவிலின் அமைப்பு, மிக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. (பக். 30 – 50). ஆழ்வார்கள் காவிரி குறித்துப் பாடியுள்ள பாசுரங்களை மிக விரிவாக விளக்கிக் காட்டுவதும் (பக். 60 – 68), சோலைகள், பூம்பொழில்களின்  விளக்கமும் (பக்.69 - 77), ஆழ்வார்களின் பாசுரங்கள் வாயிலாக, அரங்கனின் குணங்களையும், பெருமைகளையும் விளக்குவதும் (பக். 97 – 252), கோவிலின் அனைத்து விழாக்களையும் ஒன்று விடாமல் விளக்குவதும் (பக். 261 – 291), அங்குள்ள சப்த பிரகாரங்களின் விளக்கமும் (பக். 310 – 327), நூலாசிரியரின் ஆய்வுத் திறனுக்கு எடுத்துக்காட்டுகள். பின்னிணைப்பில், கோவில் நிர்வாகத்தின் பத்துக் கொத்துக்களின் விளக்கமும், நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் அரங்கன் குறித்துப் பாடியுள்ள பாசுரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
- டாக்டர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us