திருவண்ணாமலை கிரிவலத்தில் ஆர்வம் கொண்ட நடிகர் அஜீத், இப்போது ஏன் அதை கைவிட்டார் என்ற விடையை தெரிவிக்கும் முதல் கட்டுரை மட்டும் அல்ல; அட்டையில் அவரது வண்ணப்படமும் மலரை அலங்கரிக்கிறது. பிரமிக்க வைக்கும் தஞ்சை பெரிய கோவில் குறித்து ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ் காட்டிய வண்ணப்படங்கள், நேர்த்தி மிக்கவை. அதே போல சிப்பிக்குள் சுண்ணாம்பு மற்றும் பல்வேறு தகவல்கள் சிறப்பாக உள்ளன.
பாலகுமாரன், மனோஜ் செந்தில் குமார் உட்பட பலரது சிறுகதைகள், யுகபாரதி, ஜெ., பிரான்சிஸ் கிருபா ஆகியோர் உட்பட பலருடைய கவிதைகள், சுற்றுலா, வரலாறு, ஆன்மிகம் என்று பல சிறப்புகளை இம்மலர் கொண்டிருக்கிறது.