முகப்பு » தமிழ்மொழி » நூலக வளர்ச்சியில் இந்தியா

நூலக வளர்ச்சியில் இந்தியா

விலைரூ.55

ஆசிரியர் : ப.பாலசுப்பிரமணியன்

வெளியீடு: சங்கர் பதிப்பகம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
நூலகராக பணியாற்றும், இந்நூலாசிரியர் தம் ஆய்வின் போது கிடைத்த நூலகம் பற்றிய தகவல்களை தொகுத்து இந்நூலை படைத்துள்ளார். சங்க காலம் துவங்கி, இன்றைய நிலை வரை சுவடி நூலகங்கள், அரசு, தனியார், மடாலயம், பள்ளி, கல்லூரி, பொது நூலகங்கள் என, பல வகை நூலகங்களின் செயல்பாடுகளை விவரித்துள்ளார்.
சரபோஜி மன்னர், 1820ல் தஞ்சையில் உருவாக்கிய, சரசுவதி மகால் நூலகம், 1890ல், கன்னிமாரா உருவாக்கிய சென்னை கன்னிமாரா நூலகம், 1903ல் கர்சன் பிரபு உருவாக்கிய இம்பீரியம் நூலகம் போன்றவை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறைமலை அடிகள் நூலகம், உ.வே.சா., நூலகம், கீழ்த்திசைச் சுவடி நூலகம் போன்ற பல நூலகங்களின் பணிகளை விரிவுப்படுத்தியிருக்கலாம்; நூலகம் பற்றிய மேலோட்டமான கருத்துகள், வளர்ச்சியின் ஆழத்தைப் புலப்படுத்தவில்லை; எனினும், ஒரு வழிகாட்டி நூலாகக் கொள்ளலாம்.
பின்னலூரான்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us