நாட்டின் சுதந்திர போராட்டம் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், சுதந்திரத்துக்காக பலர் இன்னுயிர் தந்துள்ளனர். அவர்களில் பலரை நாம் மறந்து விட்டோம். இவர்களில் முக்கியமானவர்கள் பற்றி சுருக்கமாக, தெளிவாக ஆசிரியர் தந்துள்ளது பாராட்டத்தக்கது.
அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி, இந்த புத்தகத்தில் அதிகளவில் இடம் பெற்றுள்ளது சிறப்பு. இந்த நுாலை குழந்தைகளிடம் கொடுத்து படிக்கச் சொல்ல வேண்டும். இந்த நுாலை, அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக அளிப்பது சிறப்பு.