தமிழ்கூறும் நல்லுலகில், ‘உரைவேந்தர்’ எனச் சிறப்பிக்கப் பெறும் ஔவை துரைசாமிப் பிள்ளை, தம் உரைகளில் பின்பற்றியுள்ள நெறிகளையும், பல்வேறு நயங்களையும் அழகுற வெளிப்படுத்தியுள்ளார் நுாலாசிரியர். புறநானுாற்று உரையில் செவ்வனே பின்பற்றியுள்ள பாங்கினை தக்க சான்றுகள் காட்டியும், துரைசாமியின் தனிச்சிறப்புகளுள் ஒன்றாக கல்வெட்டுச் சான்றுகளை பயன்படுத்தியுள்ளதையும் இந்நுாலில் பதிவு செய்துள்ளார்.