முகப்பு » இலக்கியம் » சமுதாய நீரோட்டம்

சமுதாய நீரோட்டம்

விலைரூ.75

ஆசிரியர் : ஆர்.நல்லகண்ணு

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. பக்கம்:240.

போர் வீரன் மனைவி என்ற கவிதை, சூத்திரதாரி என்னும் கதையுடன் முப்பது கட்டுரைகளும் சேர்ந்த தொகுப்பு நூல் இது. அவ்வப்போது ஆர்.நல்லகண்ணு பத்திரிகைகளில் எழுதிய படைப்புகளின் தொகுப்பு.

விபின் சந்திரபால், பால கங்காதர திலகர், லாலா லஜபதி ராய், பாரதியார் ஆகிய நால்வரும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருந்துள்ளனர் என்பதை இந்த நூல் விளக்குகிறது. கங்கையையும், காவிரியையும் இணைக்கத் திட்டம் தீட்டிய சர்.ஆர்தர் கார்ட்டன் என்ற ஆங்கிலேயரின் திட்டத்தையும் பாரதியின் பாடலையும் பொருத்திப் பார்த்துள்ளார் நல்லகண்ணு.

பாரதியின் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றபோது வ.ரா.,வுக்கும் பாரதிதாசனுக்கும் அழைப்பிதழ் வழங்கப் பெறவில்லை என்பன போன்ற பல அரிய செய்திகளை இந்த நூலைப் படிப்பவர்கள் அறிய முடியும். திருக்கண்ணபுரம் கோயிலில் இரவில் வழங்கப்

படும் பொங்கல் `முனியோதனம்' என்று வழங்கப்படுகிறது. அந்தப் பெயர் எப்படி வந்தது என்பதைத் தோழர் நல்லகண்ணு அழகாக விளக்கியுள்ளார். இப்படிப்பட்ட அரிய செய்திகளுடன் எளிய நடையில் அமைந்துள்ள இந்த நூல் அனைவரும் படிக்கத் தகுந்த நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us