முகப்பு » இலக்கியம் » காக்கைச்சோறு

காக்கைச்சோறு

விலைரூ.80

ஆசிரியர் : அப்துல் ரகுமான்

வெளியீடு: நேஷனல் பப்ளிஷர்ஸ்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில், தி.நகர், சென்னை-17 (பக்கம்: 240.)

இந்த நூலில் 32 தலைப்புகளில் பல்வேறு செய்திகளாக கொட்டிக் குவிக்கிறார் ஆசிரி யர். நாம் அறிந்த தலைப்புகளை எடுத்துக் கொண்டு நாம் இதுவரை அறியாத பல நல்ல சிந்தனையைத் தூண்டும் புதிய கருத்துக்களை கூறிச் செல்கிறார் நூலாசிரி யர். காகம் நரி கதை நமக்குப் பழையது. அந்தக் கதைகளுக்கு அப்துல் ரகுமான் தரும் விளக்கங்கள் நாம் இதுவரை சிந்தித்துப் பார்க்காத ஒன்று. காக்கைகள் தன் கூட்டத்தை அழைத்துச் சாப்பட்டு ஒற்றுமையை வலியுறுத்துகின்றன என்று நாம் காலங்காலமாக கூறி வருகிறோம். ஆனால், அவை மனிதர்கள் தங்களுக்கு வைக்கும் உணவில் விஷம் வைத்திருப்பார்களோ என்ற சந்தேகத்தில் தான் தன் காக்கைக் கூட்டங்களை அழைத்து உணவை சாப்படுகின்றன என்று புதுவிளக்கம் தருகிறார்.

ஆங்கிலம், இத்தாலியம், சீனம் மற்றும் உருது பாடல்கள் என பலவற்றில் இருந்து விளக்கங்களை அள்ளித் தரும் அப்துல் ரகுமான் தமிழ் இலக்கியக் கர்த்தாக்களான மணிவாசகர், வள்ளலார், கம்பர், இளங்கோவடிகள், சாத்தனார், பாரதியார் போன்றோரி ன் படைப்புகள் பற்றியும் பல அரி ய விளக்கங்களை அளித்துள்ளார்.

எல்லார் இடத்திலும் சில திறமைகள் உண்டு. எவரையும் குறைத்து மதிப்படக்கூடாது என்ற செய்தியைக் குழந் தை ஒரு பாடப் புத்தகம் என்ற தலைப்பில் கூறுகிறார்.

இந்த நூலைப் படித்து முடிக்கையில் பல நல்ல நூல்களின் கருத்துக்களைத் தெரி ந்து கொண்ட நிறைவு கிடைக்கிறது. மொத்தத்தில் காக்கைச்சோறு நமக்கு கிடைத்த நிலாச்சோறு.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us