சித்த மருத்துவ இலக்கிய ஆராய்ச்சி மையம், இ-32, அண்ணா நகர் கிழக்கு, சென்னை-600 102. (பக்கம்: 100).
இந்நூல் சித்த வைத்திய அடிப்படையில் வெளிவந்திருக்கும் நூல்.சித்த மருத்துவம் ஐம்பது பிரிவு உள்ளதாக ஆசிரியர் கூறுகிறார். ஆனால், எல்லாப் பிரிவுகளுக்கும் கற்றுத் தேர்ந்த மருத்துவர்கள் இல்லை என்றும் பொதுவாக எல்லாவற்றுக்கும் ஒரே மருத்துவர் சிகிச்சை அளிக்கும் வரை சித்த மருத்துவம் நிமிர வாய்ப்பு இல்லை என்கிறார்.
உடலில் எழும் நோய்களில் சரி பாதி வயிறு சம்பந்தப்பட்டவை. இவை ஆண்களுக்கும் பெண்களுக்கும் தாக்குகின்றன. குன்மம், சூலை, சூலம், நிராணி, கைர்ப்பரோகம், திரட்சி, திரள் வியாதி என்பவை. இந்நூலில் பல தலைப்புகளில் நோய் பற்றியும், சிகிச்சை முறை பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது.
சித்தர்களின் பாடல்களை கூறி நோயின் தன்மையையும் அதற்கான சிகிச்சை முறையையும் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர்.
சித்த மருத்துவ நூல் வகையில் இது ஒன்று.