முகப்பு » ஆன்மிகம் » ஒளிவளர் விளக்கே போற்றி

ஒளிவளர் விளக்கே போற்றி

விலைரூ.120

ஆசிரியர் : வே.மகாதேவன்

வெளியீடு: அருள் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 224.)

திருவிளக்குப் பற்றிய அரிய தகவல்களை திரட்டித் தந்திருக்கிறார் ஆசிரியர். முப்பத்தேழு தலைப்புகளில் சங்க நூல்களில் தீபம் முதல் அன்றாட வாழ்வில் தீபம் ஏற்றி வழிபடும் திருவிளக்கு விசேஷ பூஜை வரை, சான்றுகளுடன் தொகுத்திருக்கிறார். கோபுரத்தின் மீது நிறுத்தும் கலசம் சிகை எனும் தகவல் நிறைவாய் உள்ளது.
பத்தாம் திருமுறையாம் திருமூலநாயனார் திருஅருளிச் செய்த திருமந்திரப் பாடல்களை தக்க இடத்தில் அகச் சான்றாய் வெளியிட்டிருப்பது பொருத்தமாய் உள்ளது. இந்நூலின் பல்வேறு சிறப்புகளிலும் தலையாயது என்பது "அண்ணாமலை தொழுவார் வினை
அறும்' என தேவாரம் தெரிவித்தாலும், அண்ணாமலைப் பற்றிய வெண்பாப் பாடல்கள் மனனம் செய்து, இறை முன் சொல்லி மகிழும் துதிப்பாடலாய் வெளியிட்டிருப்பது போற்றத்தக்கது.
விளக்குப் புறத்தில் வெளிச்சம் தரும் என்றால், விளக்கைப் பற்றிய இந்நூல் அகத்தில் வெளிச்சம் தரும் என்பது சாலப் பொருத்தம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us