முகப்பு » ஆன்மிகம் » பாம்பாட்டிச் சித்தர் தத்துவம்

பாம்பாட்டிச் சித்தர் தத்துவம்

விலைரூ.115

ஆசிரியர் : ஏ.எஸ்.வழித்துணை ராமன்

வெளியீடு: சங்கர் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
சங்கர் பதிப்பகம், 15/21 டீச்சர்ஸ் கில்டு காலனி 2ம் தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை -49. (பக்கம்: 264).

மரணமிலாப் பெருவாழ்வு பெற வழிகாட்டியவர்கள் சித்தர்கள். யார் அந்தச் சித்தர்கள்? என்பது தொடங்கி, யோகம், பிராணாயாமம், நாடி சுத்தி, குண்டலினி, தாரணை எனப்பல யோக விளக்கங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. "வள்ளலார் காட்டிய ஒளி
நெறி', "பாம்பாட்டிச் சித்தர் பாடல்களும் அவற்றின் தத்துவமும்' இறுதியில் இடம் பெற்றுள்ளன. பாம்பாட்டிச் சித்தரின் பாடல் ஒன்றில், "பேசும் எழுத்தையும் விழுங்கிவிடுவோம், பிறப்பு இறப்பு அற்றோம் என்று ஆடாய் பாம்பே' என்பதும் "தன்னை அறிய வேணும் - அகப்பேய் சாராமல் காக்க வேண்டும்' எனும் அகப்பைச் சித்தரின் வரியும் போன்ற பல அழகான தொடர்கள் நூல் முழுதும் நிரம்பக் காட்டப் பட்டுள்ளன. ஞான யோக நெறி முற்படுவார்க்குத் துணை செய்யும் நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us