சதுரங்கம்

விலைரூ.70

ஆசிரியர் : ப.மதியழகன்

வெளியீடு: ஸ்ரீலெட்சுமி பதிப்பகம்

பகுதி: கவிதைகள்

Rating

பிடித்தவை

ஸ்ரீலெட்சுமி பதிப்பகம்,115,வள்ளலார் சாலை,ஆர்.பி.சிவம் நகர்,மன்னார்குடி-614001.திருவாரூர் மாவட்டம்.(பக்கம்:100)

வாழ்க்கை தன் மறுபக்கத்தை காட்டும்போதெல்லாம்.இறைவனின் திருவடியை தேடுகிறோம்.நிராகரிக்கப்படும் போது தான் அன்பின் வலி புரிகிறது.பிரிவைச் சந்திக்கும் தருணங்களில் வாழ்க்கை நரகமாகிறது.மீண்டும் குழந்தையாகுங்கள் சுவர்க்கத்தின் ராஜ்ஜியத்தில் உங்களுக்கு இடம் உண்டு என்று சொல்கிறது இந்த கவிதை தொகுப்பு.நாம் கண்டு வியந்ததெல்லாம்,நம்மை உசுப்பியதெல்லாம் கவிஞரையும் உசுப்பியிருக்கிறது.சமூகத்தின் முகமூடியைக் கிழிக்க கவிஞருக்கு கவிதை ஒரு ஆயுதமாக பயன்பட்டிருக்கிறது.நமக்குள் இருக்கும் இறைமையை மீட்டெடுக்கும் முயற்சியில் கவிஞர் ஈடுபட்டிருக்கிறார்.மரணத்தை கவிதைபூர்வமாக அணுகி அதை ரசி்க்க வைக்கும் திறமை கவிஞரிடம் இருக்கிறது.நாளையின் மீது நம்பிக்கை இருப்பதால் தான் இன்று படுக்கையில் உறங்க முடிகிறது என்ற உண்மையை கவிஞரும் உணர்ந்திருக்கிறார்.சில வரிகளில் அலைகளில் கால் நனைக்கும் நம்மை திடீரென சிகரத்தின் உச்சிக்கே அழைத்துச் செல்கிறார். கவிதை தொகுப்பை வாசிக்கும் போது சிறகு முளைத்து பறந்த அனுபவம் ஏற்படுகிறது.தமிழ் அன்னைக்கு மற்றொரு மகுடமாக விளங்குவார் கவிஞர் என்பதில் துளியும் ஐயமில்லை.

Share this:

வாசகர் கருத்து

- ,

superb

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us