முகப்பு » கட்டுரைகள் » இந்தியாவில் ஓரினப்பால்

இந்தியாவில் ஓரினப்பால்

விலைரூ.100

ஆசிரியர் : கி.அய்யப்பன்

வெளியீடு: விசாலாட்சி பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை

பக்கம்: 128   

ஓரினச் சேர்க்கையை பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் இந்நூலில் எழுதியிருக்கும் ஆசிரியரின் முயற்சி, மிகத் தெளிவானது தான். நம்மில் பெரும்பாலானோர் ஓரினச் சேர்க்கை என்ற வார்த்தையை கேட்டாலே, முகம் சுளிப்பது உண்டு.ஓரினச் சேர்க்கையை பல மதங்களும், வன்மையாக கண்டிக்கவே செய்கின்றன.
 இந்தியாவில், 25 லட்சம் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இந்தியன் பீனல் கோர்ட் 377ன் படி, ஓரினச் சேர்க்கை என்பது, தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. ஆனால், டில்லி உயர் நீதிமன்றம் ஜூலை 2., 2009ல் தன் ஒரு தீர்ப்பின் மூலம், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்துடன், ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் ஒரு நாடு என்ற வகையில், 127வது நாடாக இந்தியா ஆகிவிட்டது.இந்தியக் கலாசாரம், குடும்ப அமைப்புக்கு, வேட்டு வைக்கும் இந்த ஓரினச் சேர்க்கை பற்றி, ஓரளவு விவரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறவர், நூலைப் படிக்கலாம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us