முகப்பு » உளவியல் » உட்கவர் மனம்

உட்கவர் மனம்

விலைரூ.250

ஆசிரியர் : சி.ந.வைத்தீஸ்வரன்

வெளியீடு: முல்லை பதிப்பகம்

பகுதி: உளவியல்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
குழந்தை நம்மால் நிறைக்கப்பட வேண்டிய ஒரு காலிப் பாண்டம் அன்று; ஓர் அசைவற்ற பொருள் அன்று, அது எதையெதைச் செய்கிறதோ, அத்தனையும் நம்மாலே தான் என்றும் கருதக்கூடாது. மனிதனை ஆக்குவது குழந்தையே (பக்.29) ‘குழந்தையின் உள்ளத்தில் ஒரு சக்தி குடி கொண்டிருக்கிறது.

இந்தச் சக்தியை  மலரும்படி செய்வதே கல்வியின் பேருதவியாகும் (பக்.13) இவ்விதமாக ‘குழந்தை ரகசியம்’ ‘புதல்வருக்கான கல்வி’யை வழங்கிய இத்தாலி நாட்டவரான மாண்டிசோரி அம்மையார், பல நாட்டுக் குழந்தைகளுடன், நேரடியாகப் பழகி, அவர்களிடம் கண்ட சிறப்பு அம்சங்களை உளவியல் ரீதியாக அணுகி, அறிவியல் அடிப்படையில் அமைந்த ‘கல்விக் கொள்கைகளை’ இந்நூல் படிப்படியாக விளக்குகிறது.

‘பிறப்பிலிருந்தே கற்பித்தல்’ என்ற கருத்தை ‘உலகைத் திருத்தி அமைப்பதில் குழந்தையின் பங்கு’ எனத் தொடங்கி, ‘அன்பும் அதன் மூலமும் – குழந்தை’ என, 28 தலைப்புகளில் இந்நூல் விரிவடைந்துள்ளது. கல்வியாளர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும் பண்படக்கூடிய உளவியல் ஆய்வு நூல் இது.

பின்னலூரான்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us