முகப்பு » சிறுவர்கள் பகுதி » உலகப் புகழ் பெற்ற சிறார் சித்திரக்கதை

உலகப் புகழ் பெற்ற சிறார் சித்திரக்கதை

விலைரூ.30

ஆசிரியர் : கொ.மா.கோ.இளங்கோ

வெளியீடு: புக் ஃபார் சில்ரன்

பகுதி: சிறுவர்கள் பகுதி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
உலகப்புகழ் பெற்ற, 16 சிறார் சித்திரக்கதைகள், தனித்தனி புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. குரோகட் ஜான்சன், ஜேம்ஸ் தர்பெர், மன்ரோ லீப், அலிகி உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களின் சித்திரக் கதைளை, எளிமையாக மொழிபெயர்த்து உள்ளார். பின்பக்க அட்டைகளில் இருக்கும், நூலாசிரியர்களின் சின்ன, ‘பயோ – டேட்டா’வும் பயனுள்ளதாக இருக்கிறது.
கால்நடையாகவே சென்று, அமெரிக்க கிராமங்களில், ஆப்பிள் விதைகள் விதைத்து, மரங்கள் வளர்த்த ஆப்பிள் ஜானியின் கதை நெகிழ்ச்சி ஊட்டு வதாக உள்ளது. ஒவ்வொரு கதையும், ஒரு அனுபவத்தை தருகிறது; கதையோட்டத்திற்கு தகுந்த சித்திரங்களும் அருமை!
சிறுவர், சிறுமியருக்கு, இந்த புத்தகங்களை வழங்கலாம்; அவர்கள் படிக்கும்போது, கற்பனைத் திறன் விரிவடையும்; வாசிப்பு பழக்கம் வளரும்.
சிறுவர்களின் கைகளில் அகப்பட்டிருக்கும் அலைபேசியை பறித்துவிட்டு, இந்த புத்தகங்களை கொடுங்கள்; அவர்களின் வாழ்க்கை பொருள் உள்ளதாக மாறும்.
சி.கலாதம்பி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us