சர்வதேச தீவிரவாத இயக்கங்களை தொடர் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தும் பா.ராகவன், தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பை பற்றி எழுதியுள்ளார். மத்திய கிழக்கில், குறிப்பாக ஈராக் மற்றும் சிரியாவில், ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்துள்ளது, ஐ.எஸ்.ஐ.எஸ். இதில், உலகளாவிய தொடர்பு, கோடிகளில் நிதி, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளதால், 21ம் நூற்றாண்டில், உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும். அதற்கு பின் உள்ள, ஜாதி, எண்ணெய் அரசியலை, வெளிச்சம் போட்டு காட்டுகிறார், பா.ரா.,