வாஞ்சிநாதனால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆஷ்துரையில் இருந்து, சென்னையில் இறந்த சரிகாஷா வரையிலான கொலை வழக்குகளைத் தொகுத்து எழுதியுள்ளார் நுாலாசிரியர். பூண்டி, சிங்கம்பட்டி ஜமீன், சூலுார் சுப்பராவ், கருங்குழி பார்சல், ஆளவந்தார், லட்சுமி காந்தன், இமானுவேல் சேகரன், பார்வதிஷா ஆகிய தமிழகத்தை மிரட்டிய கொலை வழக்குகளை இதில் படிக்கலாம். குற்றவாளிகள் எப்படியெல்லாம் தப்ப முயல்கின்றனர். சட்டம் அவர்களுக்கு எப்படி கிடுக்கிப்பிடி போடுகிறது என்பதை விளக்கமாக எடுத்துரைக்கும் நுால். –தி.செல்லப்பா