உலகத்தின் எந்த ஒரு பகுதியையும் ஓரிரு மணித் துளிகளில் தொடர்பு கொள்ளும் நிலை இன்று உருவாகியுள்ளது. இந்த சூழலில், நம்மை சூழ்ந்துள்ள இயற்கையான சுற்றுப்புறம், நாம் பயன்படுத்தும் தொழில் நுட்பம், நம் உடல் இயங்கும் முறை, அவற்றுள் பொதிந்து கிடக்கும் எண்ணற்ற அறிவியல் ரகசியங்கள் பற்றியும் அறிந்துகொள்ள உதவும் அற்புத நுால் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.