‘எங்களை வஞ்சித்தது நடுநிலையற்ற இயற்கை; பகிரப்படவில்லை வலியும் நோவும். பிறக்கவில்லை இன்னமும், பெண்டிரின் உபாதைகளை முழுக்கப் புரிந்த ஆண்!’ என்ற கவிதை, தராசின் தடுமாற்றத்தையும்; ‘நுரையே நீயென்ன நீரின் மகுடமா சரிகையா அங்கியா... ஏன் உடுத்துகிறாய் வெண்ணிற ஆடையை?
‘குமிழிகள் என்ன கனவின் போதைகளா, குதுாகலத்தின் துாதுவனா? ததும்பல் என்ன கொஞ்சலா... கணநேர வாழ்வெனினும் உற்சாகம் குன்றாமல் இருக்கின்றாய் நீ!’ என்ற கவிதை, நீர் மகுடம் சூடிய சிறப்பையும் கூறுகிறது.