தாமிரபரணி வரலாற்றை விளக்கும் நுால்களில் இடம்பெறாத சில சிறப்புச் செய்திகள், இந்நுாலாசிரியரால் சொல்லப்பட்டுள்ளது பாராட்டிற்குரியவை. கன்னடியன் கால்வாய் பற்றி கூறியுள்ள வரலாற்று செய்தி (பக்., 50 – 55) முக்கியத்துவம் பெறுகிறது. பார்வதியின் தோழி தாமிரபரணி என்பதையும், அகத்திய முனிவர் விமானத்தில் பயணித்ததையும், சகலகோடித் தீர்த்தம் தாமிரபரணி என்பதையும் (பக்., 69), இந்த நதியின் மகத்துவத்தை பட்டியலிடுகிறது இந்நுால்.