முகப்பு » வாழ்க்கை வரலாறு » காலமெல்லாம் கண்ணதாசன்

காலமெல்லாம் கண்ணதாசன்

விலைரூ.130

ஆசிரியர் : ஆர்.சி.மதிராஜ்,

வெளியீடு: தமிழ் திசை

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
‘திரைப்படக் கவிஞர்கள் தாங்கள் படித்தவற்றையும் கேட்டவற்றையும் தங்கள் சிந்தனைக் கேற்ப பாடலாக வடித்தார்கள். அது நம் மூளையைத் தொட்டது. ஆனால் கண்ணதாசன் தம் அனுபவங்களைப் பாடலாக்கிக் கொடுத்தார்.  அது நம் இதயத்தைத் தொட்டது.
 வாழ்க்கைக்குப் பல படிப்பினைகளைக் கொடுத்தது. அதனால் கண்ணதாசன் பாடல்கள் காலம் கடந்து நிற்கிறது’ என்ற பாடலாசிரியர் முத்து லிங்கம் முன்னுரையுடன் துவங்குகிறது, இந்நுால்.
கண்ணதாசன் பாடல்களைத்தான் காலம் முழுக்க எல்லாரும் எழுதி, சிலாகித்து, கொண்டாடி விட்டார்களே, இவர் புதிதாக என்ன எழுதிவிடப் போகிறார், என்று யாரேனும் நினைத்தால், அந்த சிந்தனை முற்றிலும் தவறு என்று நிரூபிக்கிறது இந்நுால்.  
தன் சிறப்பான சிந்தனை, கற்பனை வளத்தால் நுாலாசிரியர் பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் தரும் விளக்கம் நிறைவைத் தருகிறது. கண்ண தாசன் பாடல்கள் வழியே இன்றைய சமூகத்தில் நிகழும் அவலங்களையும் தொட்டிருக்கிறார், நுாலாசிரியர் மதிராஜ்.
நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் வரும்,  ‘எங்கிருந்தாலும் வாழ்க...’ என்ற பாடலுக்கு தரும் விளக்கம் இன்றைய காதலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. இப்படி நுால் முழுக்கவும் 30 பாடல்களுக்கு வெவ்வேறு சிந்தனைகள், விளக்கங்கள் தரப்பட்டு உள்ளன.
சூர்யா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us