எழுதிய பாடல்களை எல்லாம், அழியாத காவியங்களாக உருவாக்கியவர் கல்யாணசுந்தரம். தத்துவம், காதல், சமுதாயத்தின் அடிநிலை என கருத்துக்குவியலாக உள்ளன. இதில், காதல் பாடல்களை எடுத்து ஆய்ந்து எழுதப்பட்ட நுால். பாடல்களில் கண்ணியமும், தமிழர் பண்பாடும் மிளிர்ந்து நிற்பதை நயமாக விளக்குகிறார். சமூகம், இயற்கை என பல தலைப்பில் ஆய்ந்துள்ளார். உவமை நயங்களையும் அழகுற விளக்கியுள்ளார். – விஸ்வா