பிரபல லத்தின் அமெரிக்க எழுத்தாளர், போர்ஹெஸ் எழுதிய நுாலை, தமிழாக்கம் செய்துள்ளார் கார்த்திகை பாண்டியன். உலகில் கற்பனையாக உருவாக்கப்பட்ட உயிரினத் தோற்றங்களை, மிகவும் வினோதமாக அணுகியுள்ளது இந்த நுால்.
மானுட வளர்ச்சியில், கற்பனை சித்திரங்களுக்கு முக்கிய இடம் உண்டு. நம்பிக்கையாக, தத்துவத்தின் பிம்பமாக, செயலின் ஊற்றுக்கண்ணாக என, எப்படி வேண்டுமானாலும் இவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
நம்மூர், கருடன் உருவமும் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. கற்பனையாக படைத்த உருவங்களின் ஊடே, எழுத்தாளரின் சிந்தனை பாய்ந்தோடுகிறது. குழந்தைகளுக்கான அனிமேஷன் தொகுப்பு போலவும் உள்ளது.
தத்துவத்தின் கூடாரம் போலவும் தெரிகிறது. முதன்முறையாக, வினோதமான மிருக காட்சி சாலைக்குள் சென்று வரும் மனநிலை, புத்தகத்தை படிக்கும் போது ஏற்படுகிறது.
– அமுதன்