வீரமாமுனிவர் காலம் தொட்டு, அண்மையில் மறைந்த சிலம்பொலி செல்லப்பன் வரை இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்களின் வரலாற்றுச் சுருக்கம் இந்த நுாலில் அடங்கியுள்ளது.
ஆறுமுகநாவலர், வள்ளலார், பாரதி, பாரதிதாசன், வ.உ.சி., – உ.வே.சா., மறைமலை அடிகள் என பட்டியல் நீள்கிறது. பிறப்பு, கல்வி, இலக்கியப்பணிகள், மறைவு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அறிஞர்களின் பட்டியல் அகர வரிசையில் அமைந்துள்ளதும், படங்களுடன் பிரசுரம் ஆகியுள்ளதும் சிறப்பு. அறிஞர்களின் வரலாற்றைக் கூறும் நல்ல கையேடு.
– பின்னலுாரான்