முகப்பு » கட்டுரைகள் » மனதில் நிற்கும் மாணவர்கள்

மனதில் நிற்கும் மாணவர்கள்

விலைரூ.240

ஆசிரியர் : பெருமாள் முருகன்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
‘ஆசிரியர் உதிர்க்கும் சொற்கள் விதை போல... அவை எங்கும் முளைக்கும்’ என்பதே இந்த நுாலின் அடிநாதம். மாணவர்களுடன், தமிழ் பேராசிரியருக்கு, வகுப்பறையிலும், அதைத் தாண்டியும் உள்ள உறவை, அக்கறையை நெடுஞ்சுவடுகளாக கண்முன் நிறுத்துகிறது.

நெகிழ்த்தும் பண்புள்ள 40 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இதை, தன் வரலாறாகவும் கொள்ளலாம். எளிய நடையில் சொற்கள், நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துகின்றன. துடிப்பாக மனதில் பதிகிறது. வகுப்பறையில் ஏற்றப்பட்ட அன்பும் பண்பும் மிக்கக் கொடி, மாணவன் வாழ்வுப் பாதையில் வண்ணமயமாக பறப்பதை காண முடிகிறது.

ஆசிரியர் – மாணவர் பிணைப்பு, நுால் முழுதும் இயல்பாக வெளிப்படுகிறது. நம்பிக்கையாக, முன்னேற்றமாக மிளிர்வதை காண முடிகிறது. ஆசிரியர் மனதில் மாணவருக்குள்ள இடத்தை காண முடிகிறது. அது, மனித மாண்பை ததும்பச் செய்கிறது. முன்னுதாரணமாக திகழ விரும்புவோர் முதற்படியில் ஏற வழிகாட்டும் நுால்.

மலர்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us