கிராமங்களில் வாழ்ந்த புலவர்கள், அறிஞர்கள் உதிர்த்த கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 95 துணுக்குகள் உள்ளன. அறிஞர்களை எங்கும் காண முடியும். பேச்சிலும், செயலிலும் முதிர்ந்தவர்கள் உதிர்த்த கருத்துக்களை துணுக்குகளாக்கி தொகுக்கப்பட்டுள்ளது. சில சிந்திக்கத்தக்கவை; சில சிரிப்பை தருபவை. நல் அறிவை புகட்டுகின்றன. முக்கிய பிரமுகர்கள் உதிர்த்த முத்துக்களும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. – ராம்