முகப்பு » கட்டுரைகள் » வாழ்க்கை தொட்டுவிடும் துாரம் தான்!

வாழ்க்கை தொட்டுவிடும் துாரம் தான்!

விலைரூ.150

ஆசிரியர் : மவுலவி நூஹ் மஹ்ழரி

வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
உயிர்த்திருப்பது எல்லாம் வாழ்க்கை அல்ல; உள்ளத்தில் தெளிவும், பரிவும், நிம்மதியும் நிறைந்திருப்பது தான் வாழ்க்கை. அப்படிப்பட்ட வாழ்க்கையை சுய கட்டுப்பாடும், விசால பார்வையும், தகாதவற்றை நாடாதிருக்கும் பிடிவாதமும் சாத்தியமாக்கும் என, இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

மொத்தம், 33 தலைப்புகள். பொய்யை வெறுக்கும் எறும்புகள்; மன்னிப்பு மகோன்னதமானது. அதற்கு கிடைக்கும் பரிசுகள் அலாதியானது; இரவல் பொருட்கள் ஒருவரின் நேர்மைக்கான பரிசோதனை. அதில் நீதியை நிலைநாட்ட வேண்டும்; அண்டை வீட்டாரின்  அன்பைப் பெறுவதே மனிதத்தின் உன்னதம் என, சிறு கட்டுரைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அறிஞரான  மவுலவி நுாஹ் மஹ்ழரி, நபிகளாரின் செயல்பாடு மற்றும் அறிவுரை, திருக்குரானின் வழிகாட்டுதல் வழியே, வாழ்க்கையை செம்மைப்படுத்தும் விஷயங்களை கூறியுள்ளார்.  
பெருந்துறையான்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us