தமிழகத்தில் நீதிக்கட்சி துவங்கியது முதல் இன்றுவரை திராவிட இயக்கங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, மொழி உரிமை, மாநில உரிமை, சமூக நீதி, உள்கட்டமைப்புக்கு ஆற்றிய பணிகளை பட்டியலிடும் நுால்.
அண்ணாதுரையின் வாழ்க்கை வரலாற்று திருப்பங்கள் நிறைந்தது மட்டுமல்ல; வரலாற்றைத் திருப்புவதாகவும் அமைந்தது. காங்கிரஸ் அல்லாத கட்சி சார்பில், இந்தியாவில் முதல்வரான இரண்டாவது தலைவர். இப்படி பல்வேறு விபரங்களை தெரிவிக்கிறது.
தற்கால தமிழக அரசியல் நிகழ்வுகளையும், திராவிட இயக்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் விளக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்