‘வெள்ளைக்காரரை வீரமாமுனிவர் ஆக்கியதே எம் தமிழ் செந்தமிழ்’ என அழகு தமிழ் பழகச் சொல்லி பாடிய 86 கவிதைகளின் தொகுப்பு நுால். ஆசிரியரின் சமுதாய வேட்கை, கவிதைகளில் புலப்படுகிறது.
தி.மு., மற்றும் தி.பி., என, திருமணத்துக்கு முன், பின் தாய் – மகன் உறவை சுட்டுகிறது. ‘நீர் ஓடினால் தான் ஆறு... நின்றால் அது குட்டை... நீ ஓடு... ஓடு..., என, வாழ்க்கை தேடலை காட்டுகிறது. – சீத்தலைச்சாத்தன்