முகப்பு » வரலாறு » புலியின் நிசப்தம்

புலியின் நிசப்தம்

விலைரூ.280

ஆசிரியர் : வி.கதிர்வேல்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
சுவாமி விருபாக் ஷா எழுதிய, ‘புலியின் நிசப்தம்’ படித்தேன். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை விசாரணைக் குழுத் தலைவர் என்ற முறையில், இலங்கையில் பல ஆண்டுகளாக நடந்த இனப் போராட்டத்தை நன்கு அறிந்திருந்தேன். அங்கு கொடூர படுகொலைகள் மத்தியிலும், வாழும் கலை ஆசிரியர்கள், தொண்டர்கள் மிக தைரியத்தோடு பணியாற்றி உள்ளனர். குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சமாதானம், அமைதி ஏற்படுத்த ஆற்றிய அரும் பெரும் சேவை பற்றி ஆசிரியர் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

குருதேவரின் முயற்சிக்கு விடுதலைப் புலிகள் தலைமை ஒத்துழைத்திருந்தால், அமைதி கிடைத்திருக்கும்; பல்லாயிரம் படுகொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்பது தெளிவு. இந்த நுாலில், முல்லைத் தீவின் ரத்த ஆறு, குருதேவரை ஏன் கடத்தவில்லை என்ற  அத்தியாயங்கள் அற்புதமானவை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இதை எழுதிய சுவாமி விருபாக் ஷா பாராட்டுக்குரியவர்.
கார்த்திகேயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us